பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Tuesday, July 2, 2013

நல்ல கதை



ஒரு சுத்தி 

சின்ன சாவியைப் பார்த்து கேட்டது.

எவ்வளவு தான் அடித்தாலும் என்னால் ஒரு பூட்டை திறக்க முடியவில்லை.

இவ்வளவு சிறியதாக இருக்கும் நீ,

அவ்வளவு பெரிய பூட்டை எளிதாக திறந்து விடுகிறாய். 

அது எப்படி சாத்தியமாகிறது?  என்று கேட்டது.

அதற்கு அந்த சாவி சொன்னது .

நீ வெளியில் இருந்து வேலை செய்கிறாய்.

நான் உள்ளே சென்று வேலை செய்கிறேன்.

அதனால் தான் என்னால் பூட்டை எளிதாக திறக்க முடிகிறது என்று சொன்னது.

எந்த ஒரு பிரச்சனையையும் நாம் மனதின் உள்ளே கொண்டு செல்லும் போது, அதற்கு எளிதில் தீர்வு காண முடிகிறது. 


கதை : வெ . இறைஅன்பு  

  

1 comment:

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்