பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Saturday, June 29, 2013

ஆண்பால் - தாய்ப்பால்

ஆண்பால் பெண்பால் 
அன்பால் கலந்தால் 

பெறும்பால் 
ஆண்பால் ஆனால் 
கொடுப்பாள் தாய்ப்பால் 

பெண்பால் ஆனால் 
கொடுப்பாள் கள்ளிப்.........

நிறுத்துங்கள் 
அது விஷம்............ 


படித்ததில் பிடித்தது 

இறைவன் - குயவன்


இறைவன் எனும் குயவன் 

வடித்த சிலை 

மனிதன்......................




Friday, June 28, 2013

எங்க ஊரு அழகான ஊரு - குற்றாலம்



மலை பாரு 
மழை பாரு 
மழையோடு சாரல் பாரு  
ஆறு பாரு  
குளம் பாரு 
வயல் பாரு 
வயலில் அழகான பயிர் பாரு 
வயல் நடுவில் ரெயில் ரோடு பாரு 
எங்கு பார்த்தாலும் பச்சை பாரு 
எல்லாம் ஜோரு 
எங்க ஊரு அழகான ஊரு 
நாட்டு மக்கள் பலர் கூடும் ஊரு 
எங்க ஊரு நல்ல ஊரு  
எங்க ஊரு பேரு 

- குற்றாலம்  


Thursday, June 27, 2013

பொறியியல் படிப்பு படிக்க வெச்சா நல்லது தான்....ஆனால்...

அஞ்சு பைசா 
பத்து பைசா 
வட்டிக்கு கடன் வாங்கி 
கடன் கிடைக்கலனா
கந்து வட்டி கடன் வாங்கி 
அம்மா தங்கத் தாலி அடகு வச்சு 
+1 ல் பெயில் ஆகி 
+2 ல் விளிம்பில் பாஸ் ஆனா தன் பையனை 
பக்கத்துக்கு வீட்டில் ரெண்டு பேரு 
எதிர்த்த வீட்டில் மூணு பேரு 
பொறியியல் படிப்பு படிக்கிறான்னு 
படிக்காத தன்  பையனை, 
பட்டிணத்தில் பொறியியல் படிப்பு படிக்க வச்சா?
அவன் எப்படி படிப்பான்? 
முதலாண்டில் பத்து பேப்பர் 
இரண்டாமாண்டில் எட்டு பேப்பர்
நான்காண்டு முடித்து 
வெளியில் வரும் பொழுது பதினெட்டு பேப்பர்
அரியர் வைப்பான் 
படிக்க வெச்சா நல்லது தான்
அவன் திறமைகேற்ற(அறிவுக்கேற்ற)
படிப்பு படிக்க வெச்சா நல்லது தான்
உங்க ஆசையை குத்தஞ் சொல்லவில்லை 
பணம் கொடுத்தா படிக்க சீட்டு கிடைக்கும் 
படிக்கலனா எப்படி பட்டம் கிடைக்கும். 

தப்பாக நெனைக்க வேண்டாம், 

யோசிச்சு பாருங்க 

உங்க பையன் வாழ்க்கை  நல்ல இருக்கும். 

அவன் திறமைகேற்ற படிப்பு படிக்க வெச்சா......................

Wednesday, June 26, 2013

சூரியகாந்தி





எனக்கொரு காதலி

வட்ட முகம்

மஞ்சள் நிறம்

தேன் சுறக்கும் இதழ்

தேனீ க்கள் அவள் விசிறிகள்

சாலையில் செல்லும் என்னை தலை அசைத்து அழைப்பாள்

உன்னோடு நானும் வருகிறேன் என்பது போல் விழிப்பாள்

தென்றல்  அவளை வருடும் 

சாரல்  அவளை  நீராட்டும் 

சூரியன் அவளை உயிர்ப்பிக்கும் 

அவள்  அழகில் என் இதயம் தொலைத்தேன்.

அவள் தலை அசைத்தாள், நான் தலை சுற்றிப் போனேன். 


Monday, June 24, 2013

ஹைக்கூ

சாராயம்


வாழ்க்கை 


விரையம் 


சாராயம் .......................


வரதட்சணை


பெண்ணுக்கு 


வேண்டும் தட்சணை 


வேண்டாம் வரதட்சணை...............



காற்றாடி


வயல்காட்டில் 


நட வேண்டாம் 


காற்றாடி.............



குழந்தை


அழுக்கும் 


அழகு 


குழந்தை .............................


Friday, June 14, 2013

வலைப்பூ




நல்ல பல பதிப்பு தாங்கும் - ஒரு இணைப்பு 

எப்போதும் எனக்கு - உன் நினைப்பு
என் படைப்பை உலகம் பார்க்க வைக்கும் - ஒரு இணைப்பு 

உன்னால் நண்பர்கள் பலருடன் நல்லதொரு - பிணைப்பு 

வலைப்பூ - உலகத்துடன் எளியதொரு - இணைப்பு 

நல்ல பல தகவல்கள் பகிரும் ஒரு இணைப்பு 

வலைப்பூ தரும் செய்தியெல்லாம் - இனிப்பு 

என் சிறிய படைப்பு உலகத்துடன் இணைப்பு - அது வலைப்பூ 

வலைப்பூ - பலர் உழைப்பு 

நல்ல ஒரு படைப்பு - வலைப்பூ 



Wednesday, June 12, 2013

சிந்திப்போம், சிந்திக்க வைப்போம்

சிந்திப்போம், சிந்திக்க வைப்போம்  

புத்தகம் வாசிப்பதற்கு 




Monday, June 10, 2013

தமிழனே - தமிழனாயிரு

தாய் மொழியை மறந்தால் நம் அடையாளத்தை தொலைத்து விடுவோம்.

கவிஞர் வைரமுத்து.


தமிழனே  - தமிழனாயிரு 

நம் திறமை கண்டு,  உலகமே நம்மை வியந்து  பார்த்துக் கொண்டிருக்கிறது.  


நாம் ஆங்கிலம் கற்காமல், ஆங்கிலேயனை தமிழ் கற்கச்  செய்ய வேண்டும்.

 

Wednesday, June 5, 2013

கொஞ்சம் இதைப் படியுங்க.........

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 


ரொம்ப ரொம்ப நல்ல சட்டம்.

நாம் எல்லோரும் இனிமேல் எல்லா தகவலையும் எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.

இனிமேல் இந்தியாவில் எந்த தப்பும் நடக்காது.

இந்தியா வல்லரசு ஆகிவிடும்.

   ஆனால் எனக்கு மட்டும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பதில் வரவில்லை. நான் கடந்த ஆறு மாதத்தில் இரண்டு முறை விண்ணப்பித்து  விட்டேன். 

         எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னைக்காவது ஒரு நாள் பதில் வரும். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது. பதில் வரும் பொழுது எல்லாம் முடிந்திருக்கும். 


திருப்பதி கோவிலின் கிளை அலுவலகம்...........................

        திருப்பதி கோவிலின் கிளை அலுவலகம் ( துணைக் கோவில் ) கன்னியாகுமரியில் 22 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.

           இனி மேல் கோடிக்கணக்கில்  பணமும், கிலோ கணக்கில் தங்கமும் போட நினைப்பவர்கள் திருப்பதி கிளை அலுவலகத்தில் போடலாம். நீண்ட தூரம் அலையத் தேவையில்லை. 

Tuesday, June 4, 2013

நான் எதை எழுத?

எதை எழுத? 

நான் எதை எழுத? 

நீங்களே சொல்லுங்கள்
 
நான் எதை எழுத? 

கதை எழுதவா?

கவிதை எழுதவா?

எதை எழுத? 

என் 

கதை கருத்து சொல்லும் 

கவிதை காதல் சொல்லும்
 
நீங்களே சொல்லுங்கள் 

நான் எதை எழுத? 

கதை எழுதவா? கவிதை எழுதவா?


குறிப்பு : இந்த கவிதை கற்பனையே. என் கவிதை கருத்தும்

 சொல்லாது, காதலும் சொல்லாது.   

மழையின் தங்கை சாரல்


பெரு துளி - மழை 

சிறு துளி  - சாரல் 

மழை - அழகு

சாரல் - மிக அழகு

ழையின் தங்கை சாரல் 

பெண் என்றால் அழகு 

மழையைப் பெண் என்றால் அதன் அழகுக்கு அழகு சேர்ப்பது 

மழையே அழகு என்றால்  

அதன் தங்கையின் அழகைச் சொல்லவா வேண்டும். 

எவ்வர்று 

குழந்தையின் சிணுங்கலும் 

பெண்களின் அழகும் 

எல்லோருக்கும் எவ்வளவு பிடிக்குமோ?

அவ்வளவு சாரலும் பிடிக்கும். 

சாரல் - மழலைச் சிணுங்கல்    

Saturday, June 1, 2013

குற்றாலம் வாருங்கள்

குற்றாலம் வாருங்கள் 

 

குளிர்ந்த காற்று அனுபபியுங்கள் 

 

குற்றாலம் வந்தால் 

 

உங்கள் உடல் மட்டுமல்ல

 

உங்கள் உள்ளமும் குளிரும்.

 

அன்புடன் அழைக்கிறோம் 

 

குற்றாலம் வாருங்கள் 

 

 

 

 

வாழ்க்கை இன்னும் எத்தனை நாள்

எத்தனை நாள் 

 

வாழ்க்கை இன்னும் எத்தனை நாள் 

 

 மற்றவர்க்கு  நீ  என்ன செய்தாய் ?

 

இத்தனை நாள் 

 

சில நாள் படித்தாய் 

 

பல நாள் உழைத்தாய் 

 

சில நாள் மகிழ்ந்தாய் 

 

பல நாள் தவித்தாய் 

 

எத்தனை நாள் 

 

வாழ்க்கை இன்னும் எத்தனை நாள்

 

எல்லோரும் ஒன்று என நினைப்பாய்

 

இம்மையில் 

 

எல்லோருக்கும்  பொருள் கொடுப்பாய் 

 

மறுமையில்   

 

நீ மகிழ்வாய் ! மகிழ்வாய் !

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்