பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Friday, May 31, 2013

10 ஆம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்போம்

   10 ஆம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்போம்  - அப்துல் கலாம் .

 

   தாய் மொழியில் கல்வி கற்கும் பொழுது தான் புரிந்து படிக்க முடியும்.

 

  ஆங்கிலமும் தேவை தான். அதற்காக தாய் மொழி அழிவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது.

 

  ஜப்பானியர்  ஒருவர் தமிழ் அறிஞராக இருக்கிறார். நாம் தமிழ் மொழி வேண்டாம் என்கிறோம்.

 

  ஆங்கிலம் ஒரு மொழி தான். தமிழில் படித்து புரிந்து கொண்டால் அதனை எளிதாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

 

  ஆங்கிலம் பேசும் சூழலில் ஒரு சில மாதங்கள் இருந்தால் எளிதாக யார் வேண்டுமானாலும் ஆங்கிலம் பேசலாம் . 

 

  எனக்குத் தெரிந்து ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் சிலர் தமிழிலும் சரியாக எழுத முடியாமல், ஆங்கிலத்திலும் சரியாக எழுத முடியாமல் தவிக்கிறார்கள்.

 

  பெற்றோர்களே  புரிந்து கொள்ளுங்கள். நாம் எல்லோரும் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்தவர்களா? நாம் அனைவரும் நல்ல நிலையில் இல்லையா?

 

  என் மகனையும் ஆங்கில வழியில் படிக்க வைக்கிறேன் என்று பெருமையாக சொல்லிக் கொண்டால் போதுமா? உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டாமா?

 

  +2 பாட த்தை இரண்டு வருடம் படிக்க வைத்து 100% தேர்ச்சி என்று சொல்வது பெரிதா? அல்லது +2 பாடத்தை ஒரு வருடம் சொல்லி கொடுத்து 98% தேர்ச்சி கொடுக்கும் அரசு பள்ளிகள் பெரிதா?

 

  படிக்காத மாணவர்களை படிக்க வைத்து தேர்ச்சி பெற வைப்பது தான் பள்ளி. நன்றாக படிக்கும் மாணவர்களை படிக்க வைப்பது பெரிய விஷயமல்ல.

 

படிப்பு படிப்பாக இருக்க வேண்டும். 

வெறுப்பாக இருக்கக் கூடாது.

 

       

No comments:

Post a Comment

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்