பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Monday, December 10, 2012

செயற்கை உயிரி

செயற்கை பாக்டீரியா 
      தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபணு அமைப்பில் மாற்றம் செய்வதன் மூலம் பல்வேறு மருத்துவ          சாதனைகளை விஞ்ஞானிகள் நிகழ்த்தி வருகிறார்கள். இதன் அடுத்த நிலையாக செயற்கையாக அவற்றை உருவாக்க முடியுமா என்றும் மரபணு குறித்து ஆய்வு நடத்தி வரும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

        இந்த நிலையில் உலகின் முதல் செயற்கை உயிரி என்று வர்ணிக்கப்படுகின்ற ஒரு பாக்டீரியாவை விஞ்ஞானிகள் படைத்திருக்கிறார்கள். அதாவது முதலில் ஒரு பாக்டீரியாவுக்கான மரபணு கட்டமைப்பை கணிணி  மென்பொருள் துணையுடன் வடிவமைத்தனர். பின் அதில் செயற்கையாக ரசாயனங்களை கலந்து அதை ஓர் உயிரணுக்குள் செலுத்தினார்கள். இதன் மூலம் செயற்கையாக ஓர் உயிரியை உருவாக்கி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இந்த செயற்கை உயிரிக்கு சிந்தியா என்று பெயர் வைத்துள்ளனர்.

              அமெரிக்காவில் மேரிலாண்ட் மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் இருந்து செயல்படும் ஜே.சி.வி.ஜ. என்ற ஆராய்ச்சி கழகத்தைச்  சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஒற்றை செல் செயற்கை உயிரியை உருவாக்கியுள்ளனர்.

               முதலில் மைகோபிளாஸ்மா மைகாயிட்ஸ் எனப்படும் பாக்டீரியாவின் மரபணுவை மாற்றம் செய்வதன் மூலம் மைகோபிளாஸ்மா காப்ரிகாலம் என்ற பாக்டீரியாவை உருவாக்கினார்கள். இதன் டி.என்.ஏ. அமைப்பை போன்ற மாதிரி வடிவத்தை கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மூலம் வடிவமைத்தனர். இந்த செயற்கை டி.என்.ஏ.வில் சில ராசாயனங்களை கலந்து ஒற்றை செல் உயிரியை உருவாக்கினார்கள்.

          இந்த பாக்டீரியாவின் மரபணு பாரம்பரியம் என்பது ஒரு கணிணிதான். ஆகவே செயற்கையாக படைக்கப்பட்ட முதல் உயிரி வடிவம் என்றால் அது நிச்சயமாக இதுதான் என்கிறார். இதை படைத்திருக்கும் குழுவின் தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர்.

      இந்த ஆய்வின் மூலம் செயற்கை பாக்டீரியாக்களை  உருவாக்கி மருந்துகள் தயாரிக்க முடியும். அதேநேரம் செயற்கை உயிரினங்களால்  உலகத்துக்கு பெரிய ஆபத்துகளும் வரலாம் என்று சொல்லப்படுகிறது. இப்படி செயற்கையாக உயிரிகளை படைத்தது சரியா?,தவறா? என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.




1 comment:

  1. \\பின் அதில் செயற்கையாக ரசாயனங்களை கலந்து அதை ஓர் உயிரணுக்குள் செலுத்தினார்கள். \\ உயிரணுவுக்கு உயிர் இருந்ததா? அப்புறம் எப்படி அது செயற்கை உயிரி ஆகும்?

    ReplyDelete

அன்பன் தகவல்